விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Sep 2023 11:15 PM GMT (Updated: 25 Sep 2023 11:15 PM GMT)

கூடலூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கூடலூர் அருகே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில், இரைச்சல் பாலம் அருகே நேற்று முதியவர் ஒருவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு மயங்கி கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினார். விசாரணையில், விஷம் குடித்து இறந்த முதியவர் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி நாயக்கர் தெருவை சேர்ந்த பார்த்திபன் (வயது 63) என்பது தெரியவந்தது. அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். பார்த்திபனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே அவருக்கு கடந்த ஒருவாரமாக நெஞ்சுவலி ஏற்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பார்த்திபன் சம்பவத்தன்று இரைச்சல் பாலம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


Next Story