விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் கோல்டு நேசகுமார் (வயது68), விவசாயி. இவருடைய மனைவி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோல்டு நேசகுமார் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த கோல்டு நேசக்குமார் நேற்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தஅவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு ெசன்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோல்டு நேசகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story