உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை


உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 1:19 AM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஈஸ்வர கண்ட நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் (வயது 65). உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை எடுத்து குடித்தார். இதையடுத்து, அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கலியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story