மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை


மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

நச்சலூர் அருகே உள்ள இனுங்கூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 65). இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் துக்கத்தில் இருந்த தர்மலிங்கம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story