அரசு பஸ் மோதி முதியவர் சாவு


அரசு பஸ் மோதி முதியவர் சாவு
x

வாலாஜா அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அனந்தலை மேட்டு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 75). இவர், இருசக்கர வாகனத்தில் வாலாஜா அரசு மருத்துவமனை அருகில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story