வாகனம் மோதி முதியவர் பலி


வாகனம் மோதி முதியவர் பலி
x

வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 75). இவர், திருவண்ணாமலை -செங்கம் சாலையிர் பெரியபாலிப்பட்டு அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story