வாகனம் மோதி முதியவர் பலி

பாளையங்கோட்டையில் வாகனம் மோதி முதியவர் இறந்தார்.
பாளையங்கோட்டை எம்.கே.பி.நகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 61). இவர் நேற்று காலையில் சட்டக்கல்லூரி அருகில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





