வாகனம் மோதி முதியவர் பலி


வாகனம் மோதி முதியவர் பலி
x

ஒட்டன்சத்திரம் அருகே வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள திருமலைராயபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). நேற்று முன்தினம் இரவு இவர், மூலச்சத்திரம்-செம்பட்டி சாலையில் நடந்து சென்றார். ஒட்டன்சத்திரம் அருகே இரட்டை வேப்பமரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story