பஸ் மோதி முதியவர் பலி


பஸ் மோதி முதியவர் பலி
x

நெல்லை அருகே பஸ் மோதி முதியவர் இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் பகுதியை சேர்ந்தவர் செல்லையா என்ற பரமசிவன் (வயது 67). இவர் துறையூர் அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்காக சென்றிருந்தார். அங்குள்ள 4 வழிச்சாலையை நேற்று இரவு கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லையா சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்லையா உடலை மீட்டு நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story