பஸ் மோதி முதியவர் பலி


பஸ் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பஸ் மோதி முதியவர் பலியானார்.

சிவகங்கை

சிவகங்கை அடுத்த கீழ வாணியங்குடியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 80). தலையாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று அங்கமுத்து கடை தெருவிற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அங்கமுத்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அங்கமுத்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story