கல்லூரி பஸ் மோதி மூதாட்டி பலி


கல்லூரி பஸ் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 30 Nov 2022 1:15 AM IST (Updated: 30 Nov 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி பஸ் மோதி மூதாட்டி பலியானார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்;-

சேந்தமங்கலம் அருகே முத்துகாபட்டி பெரிய கிணத்துபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி அம்மாள் (வயது 80). இவர், நேற்று மாலை அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் சுந்தரி அம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் விரைந்து வந்து சுந்தரி அம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Related Tags :
Next Story