தேங்காப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு


தேங்காப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு
x

தேங்காப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி இறந்தார்.

கன்னியாகுமரி

புதுக்கடை:

தேங்காப்பட்டணம் அருகே உள்ள பனங்கால் முக்கு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மனைவி தெரசம்மாள் (வயது 80). இவர் சம்பவத்தன்று தேங்காப்பட்டணம், பனங்கால் முக்கு பகுதியில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு தேங்காப்பட்டணம்-கருங்கல் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த அரசு பஸ், எதிர்பாராத விதமாக தெரசம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே தெரசம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அரசு பஸ் டிரைவர் கருங்கல் எட்டணி பகுதியை சேர்ந்த வேலப்பன் (59) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story