பட்டாசு விபத்தில் காயமடைந்த மூதாட்டி பலி

விழுப்புரத்தில் பட்டாசு விபத்தில் காயமடைந்த மூதாட்டி பலி
விழுப்புரம்
விழுப்புரம் சாலாமேடு சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி சியாமளாதேவி(வயது 85). இவர் தீபாவளியன்று தனது பேரக்குழந்தைகளுக்கு மத்தாப்பு கொளுத்தி கொடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த சியாமளாதேவியை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





