மின்ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


மின்ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாளையங்கோட்டை அருகே மின்ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள பாலாமடையை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் ஆலன் (வயது 23). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் கதவை ஆலன் நீண்ட நேரமாக திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story