மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி


மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
x

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.

திருச்சி

எலக்ட்ரீசியன்

திருச்சி தென்னூர் குத்பிஷா நகரை சேர்ந்தவர் ஆசிப்(வயது 25). எலக்ட்ரீசியனான இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின் இணைப்பை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாவு

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆசிப் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story