மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
x

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருச்சி சுப்பிரமணியபுரம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் சாகிர் உசேன். இவர் அப்பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சாகுல்ஹமீது(வயது 19). இவர் குண்டூர் அருகே கரும்பு சாறு பிழியும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கரும்பு பிழியும் எந்திரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சாகுல்ஹமீது தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story