வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது


வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
x

தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்தது.

சென்னை,

தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதுடன், மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்தது. அதன்படி, யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 காசுகள் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும், கைத்தறி, விசைத்தறி போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Next Story