கொங்கனப்பள்ளி கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைவனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்


கொங்கனப்பள்ளி கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைவனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Sep 2023 7:30 PM GMT (Updated: 14 Sep 2023 7:30 PM GMT)

கொங்கனப்பள்ளி கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே கொங்கனப்பள்ளி கிராம பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மகராஜகடை வனப்பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்று பின்னர் மீண்டும் தமிழக எல்லை வனப்பகுதியான கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்துள்ளது.

மேலும் இந்த யானை கொங்கனப்பள்ளி, கே.கொத்தூர், சிகரமானப்பள்ளி கிராமங்களில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து தக்காளி செடிகள், வாழை மரங்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது.

எச்சரிக்கை

தற்போது காட்டு யானை கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அதனை விரட்டு பணியில் தமிழக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வனத்துறை சார்பில் கொங்கனப்பள்ளி சுற்றுவட்டார பகுதி மக்கள், விவசாயிகளுக்கு இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் தங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story