யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் வாகனங்களை கவனமாக இயக்க எச்சரிக்கை


யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் வாகனங்களை கவனமாக இயக்க  எச்சரிக்கை
x

உடுமலை மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

உடுமலை மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் நடமாட்டம்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வன சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. அவற்றுக்கு தேவையான உணவு தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அளித்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.

ஆனால் கோடை காலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை இழந்து விடுவதால் வனமும் பொலிவு இழந்து விடுவது வாடிக்கையான ஒன்றாகும். இதனால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அதைத்தொடர்ந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் பயணித்து அடிவாரப் பகுதியை அடைகிறது. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதனால் அணை மற்றும் அடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

வனவிலங்குகள் மாலை நேரத்தில் அமராவதி அணைப்பகுதியில் முகாமிடுவதுடன் காலை வேளையில் உடுமலை மூணார் சாலையில் கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மலை அடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பசி தாகத்தோடு வருகின்ற வனவிலங்குகள் எதிர்பாராத விதமாக கம்பி வேலிகளை சேதப்படுத்திவிட்டு விலை நிலங்களுக்குள் புகுந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது.

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அடிவாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனவிலங்குகள் உடுமலை மூணாறு சாலையை கடக்க முற்பட்டால் வாகன ஓட்டிகள் அமைதி காக்குமாறும் அவை சாலையை கடந்த பின்னர் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் வனவிலங்குகள் மிறட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவது, கற்களை வீசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story