பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு


பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 1:57 AM GMT)

செஞ்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஊழியர் இறந்தார்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி வாசுதேவன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரகாஷ்(வயது 40). செஞ்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஊழியராக(கிளீனர்) வேலை பார்த்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராமல் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story