ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி


ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
x

ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் 3 மாதம் நடைபெறும் இந்த பயிற்சிக்கான அனைத்து செலவுகளும் தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஏ.எம்.சி.ஏ.டி. தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். இதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பை பெறலாம். இந்த பயிற்சியில் சேர விருப்பமுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த தகவலை கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story