அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு


அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
x

அங்கித் திவாரி ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற காவலில் அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் அங்கித் திவாரி ஜாமீன் மனு இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அங்கித் திவாரி ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கித் திவாரிக்கு 4வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது .


Next Story