லட்சக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர் கைது


லட்சக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் லட்சக்கணக் கில் பணம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். 44 பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் லட்சக்கணக் கில் பணம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். 44 பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

வேலைவாய்ப்பு நிறுவனம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (வயது29). என்ஜினீயர். இவர், கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். பீளமேடு அண்ணா நகரில் எஸ்.டி. குளோபல் பிளேஸ்மெண்ட் என்ற வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

அவர் தனது நிறுவனம் குறித்து ஆன்லைனில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நியூசிலாந்து நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், நல்ல சம்பளம் கிடைக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.

பணம் வசூலித்தார்

ஆனால் அவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்த அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவரின் அறிவிப்பை நம்பி பலரும் தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டனர்.

இதில், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் ரூ.1½ லட்சம், ரூ.3 லட்சம் என்று பணம் வசூலித்து உள்ளார். மேலும் அவர்களின் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக்கொண்டார்.

விமான டிக்கெட்

இதையடுத்து பணம் கொடுத்தவர்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக போலியாக கடிதம் தயாரித்து அனுப்பினார். மேலும் அவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து அதன் நகல்களை அனுப்பி கூடுதலாக பணம் வசூலித்து வந்துள்ளார்.

பின்னர் விமான டிக்கெட் வந்ததால் பலரும் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பி உள்ளனர். பின்னர் அவர் விமான டிக்கெட்டை ரத்து செய்து விட்டு ஏதாவது ஒரு காரணத்தை கூறி வந்து உள்ளார்.

லட்சக்கணக்கில் மோசடி

இந்த நிலையில் தமிழ்ச்செல்வனிடம் வேலைக்கு பணம் செலுத்திய மதுரை செல்லூரை சேர்ந்த விஜயன் என்பவர் தனக்கு வேலை கிடைக்காததால் கோவை வந்து விசாரித்து உள்ளார்.

அப்போதுதான் தமிழ்ச்செல்வன் மோசடி செய்தது தெரிய வந்தது. உடனே அவர், கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் நேற்று மட்டும் 16 பேர் தமிழ்ச்செல்வன் மீது புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் தமிழ்ச்செல்வன், தற்போது 16 பேரிடம் மட்டும் ரூ.17 லட்சம் மோசடி செய்து உள்ளதும், மேலும் 44 பேரிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

44 பாஸ்போர்ட் பறிமுதல்

இதையடுத்து தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து பலரிடம் வாங்கி வைத்து இருந்த 44 பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வ னை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, வெளிநாட்டில் ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். மோசடி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றனர்.

1 More update

Next Story