விக்கிரவாண்டி அருகே வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் சாவு


விக்கிரவாண்டி அருகே வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் சாவு
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

விக்கிரவாண்டி அருகே வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அடுத்த கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் பரசுராமன்(வயது 21). இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் திருக்கனூரில் இருந்து கயத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். மதுரப்பாக்கம் கொய்யாத்தோப்பு பகுதி அருகே வந்த போது எதிரே புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பரசுராமன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story