திருப்பத்தூரில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

வாணியம்பாடி அருகே 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆங்காங்கே பள்ளங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், அடுப்புகள் உள்ளிட்டவற்றை போலீசார் கண்டறிந்தனர். பின்னர் அவற்றை மொத்தமாக போலீசார் அழித்தனர். மேலும், அதனை பதுக்கி வைத்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





