கல்வராயன்மலையில்1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில்1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி வனப்பகுதியில் சமூகவிரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் அமைத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் கரியாலூர் தனிப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் ஆரம்பூண்டி வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக தலா 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 பேரல்களில் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், பேரல்களில் இருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி, அதேஇடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார்? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story