பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள்
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடந்தன.

பெரம்பலூர்

தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதியிலேயே "தமிழ்நாடு நாள் விழா" இனி கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி காலை 10 மணி முதல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த போட்டிகளில் பங்கேற்க 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவ-மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும், தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி., சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகியவை போட்டிக்கான தலைப்புகள் ஆகும்.

போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story