தகவல் பெறும் உரிமை சட்ட வார விழாவையொட்டி கட்டுரை போட்டி


தகவல் பெறும் உரிமை சட்ட வார விழாவையொட்டி கட்டுரை போட்டி
x

தகவல் பெறும் உரிமை சட்ட வார விழாவையொட்டி கட்டுரை போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் அம்பிகா அறிவுறுத்தலின் பேரில் தகவல் பெறும் உரிமை சட்ட வார விழாவையொட்டி செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு கட்டுரை போட்டி நேற்று நடத்தப்பட்டது. போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவண்ணன், தீயணைப்பு அலுவலர்கள், வீரர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story