1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நாளை தொடங்குகிறது


1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு     ஆண்டு இறுதி தேர்வு நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 9 April 2023 7:00 PM GMT (Updated: 9 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நாளை தொடங்குகிறது.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 12-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுகள் வருகிற 20-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வி துறையின் ஆண்டு அட்டவணைப்படி நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி வேலை நாள்

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நாளை தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. பள்ளியின் கடைசி வேலைநாள் வருகிற 28-ம் தேதி ஆகும். மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்தாலும் வருகிற 28-ம் தேதி வரை ஆசிரியர்கள் பணிக்கு வருவார்கள். 29-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றார்.


Next Story