அகழாய்வை பார்வையிட்ட மாணவ, மாணவிகள்


அகழாய்வை பார்வையிட்ட மாணவ, மாணவிகள்
x

மயிலாடும்பாறையில் நடந்து வரும் 2-ம் கட்ட தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், மயிலாடும்பாறையில் நடந்து வரும் 2-ம் கட்ட தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர். மேலும், அகழாய்வின் போது கிடைத்த பானை ஓடுகள், மண் குடுவைகள், மண் குவளைகள், வட்டச்சில்கள், கல் மணிகள், சுடுமண் மணிகள் மற்றும் இரும்பு கருவிகளை பார்வையிட்டனர். இந்த அகழாய்வு குறித்து மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல் மற்றும் பொறுப்பாளர் பரந்தாமன் ஆகியோர் மாணவர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வு நடந்து வருகிறது. இதில், மயிலாடும்பாறை அகழாய்வு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று கூறினர். கல்லூரி பேராசிரியர்கள் வெங்கடேஸ்வரன், பிரயலட்சுமி ஆகியோர் கூறுகையில், மாணவர்கள் தொல்லியல் பாடத்தை ஏட்டில் இருப்பதை படிப்பதைவிட கள ஆய்வு செய்து, களத்தில் நின்று கற்றல் மிகவும் சிறந்த முறையாகும். இத்தகைய கள ஆய்வு படிப்பை மாணவர்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றிருக்கும் என்றனர்.


Next Story