செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஏரிக்கு வரும் நீரை அப்படியே அதிகாரிகள் வெளியேற்றுகின்றனர்.

குன்றத்தூர்,

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக நேற்று காலையில் உபரி நீர் திறப்பு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது.

தற்போது புயல் உருவாகி உள்ளதன் காரணமாக ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்தானது அதிகரித்ததன் காரணமாக மீண்டும் உபரி நீர் திறப்பு நேற்று மாலை 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நீர்மட்டம் கண்காணிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.74 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 792 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து 2,800 கன அடியாக உள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் ஏரிக்கு மேலும் கூடுதல் நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போது ஏரிக்கு வரக்கூடிய நீரை அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்து உபரி நீர் திறப்பதை 3 ஆயிரம் கன அடியாக உயர்த்தி உள்ளனர். தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை கண்காணித்து கூடுதலாக திறப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story