வரும் 24-ம் தேதி முதல் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: திமுக தலைமை அறிவிப்பு


வரும் 24-ம் தேதி முதல் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: திமுக தலைமை அறிவிப்பு
x

கோப்புப்படம் 

சென்னையில் வரும் 24ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக ஜனவரி 24ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னையில் வரும் 24ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 24ம் தேதி கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், 27ம் தேதி பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இதையடுத்து வரும் 28ம் தேதி நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 29ம் தேதி சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், 30ம் தேதி தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெற உள்ளது.

இதையடுத்து வரும் 31ம் தேதி ராமநாதபுரம், கடலூர் திமுக நிர்வாகிகள் கூட்டமும், பிப்ரவரி 1ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், பிப்ரவரி 2ம் தேதி வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிப்ரவரி 3ம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீ பெரும்புதூர் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும், பிப்ரவரி 4ம் தேதி திருவண்ணாமலை, ஆரணி, பெரம்பலூர், திருச்சி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் , பிப்ரவரி 5ல் கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story