மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் திருச்சி, மதுரை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் திருச்சி, மதுரை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் திருச்சி, மதுரை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி

நீண்ட நாள் கோரிக்கை

மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக திண்டுக்கல் வரை (வண்டி எண்: 16847-16848) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் மயிலாடுதுறையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்க வேண்டும் என்று திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த அறிவிப்பால் ரெயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டை

அதன்படி வண்டி எண் 16847 (எக்ஸ்பிரஸ் ரெயில்) மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன் கோவில் சாண்டி, கடையநல்லூர், தென்காசி, வழியாக சென்று செங்கோட்டைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றைடையும்.

இதில் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் முன்பதிவில்லா பயணிகள் ரெயில் இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் இணைந்து செல்லும். இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 16848 செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறையை வந்தடையும்.


Next Story