விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு


விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 8 July 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே துறையூர் கிராமத்தில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். தொழிற்சாலை சுற்றுச்சுவரில் உள்ள ஜன்னல் பகுதியில் கடந்தை விஷ வண்டுகள் கூடு கட்டி, தொழிலாளர்களை விரட்டி கடித்தன. இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்கள் அந்த தொழிற்சாலைக்கு சென்றனர். தீப்பந்தங்களை வைத்து கூடுகளை எரித்து விஷ வண்டுகளை அழித்தனர்.


Next Story