ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு


ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு
x

ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்து சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா பாண்டி மகன் சதிஷ்குமார் (வயது 24). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். ஏர்வாடியில் உள்ள டோனாவூர் விலக்கு அருகே வந்த போது, பெருமளஞ்சியை சேர்ந்த சுடலைமுத்துக்குமார் மகன் அன்பு ஆனந்த் (22) ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ.500 பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பு ஆனந்தை தேடி வருகின்றனர்.


Next Story