கல்லூரி மாணவரிடம் பணம் பறிப்பு

கல்லூரி மாணவரிடம் பணம் பறித்து சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை தாழையூத்து பழைய பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா. இவருடைய மகன் மாடசாமி (வயது 21). என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவரிடம் செல்போன் செயலி மூலம் பழகி வந்த மர்மநபர் சம்பவத்தன்று ஸ்ரீநகர் காட்டுப்பகுதிக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற மாடசாமியை அங்கு புதரில் மறைந்து இருந்த மர்மநபர்கள் சிலர் மிரட்டி அவரிடம் ரூ.7 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





