முதியவரை மிரட்டி பணம் பறிப்பு

முதியவரை மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர்.
சிவகங்கையை அடுத்த வண்டவாசியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 60). இவர் உடையநாதபுரம் என்ற இடத்தின் அருகே ஆட்டுக்கிடை போட்டுள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். கரும்பாவூர் விலக்கு அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் ஜெயபாலை வழிமறித்து வாளை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரொக்கம் ரூ.5 ஆயிரத்தையும் மற்றும் பொருட்களை பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





