கண் சிகிச்சை முகாம்


கண் சிகிச்சை முகாம்
x

கலவையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, மணி தங்க மாளிகை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து 181-வது கண் சிகிச்சை முகாமை நடத்தின. மாவட்ட கலால் உதவி ஆணையர் சத்தியபிரசாத் தலைமை தாங்கினார். கலவை தாசில்தார் மதிவாணன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 485 நபர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களில் 175 பேர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமை மணி, மதிமாறன், சீனிவாசன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.


Next Story