மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

கலசபாக்கம் அருகே மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த கோவூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65), விவசாயி. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்வராஜ் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார்.
உடனே குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





