தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை கொண்டார்.
ஆலங்குடி அருகே மைக்கேல்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 59). விவசாயி. இவருக்கும், இவரது மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கண்ணன் மதுபோதையில் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





