பாம்பு கடித்து விவசாயி சாவு


பாம்பு கடித்து விவசாயி சாவு
x
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி அடுத்த பில்லனக்குப்பத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). விவசாயி. இவர் கடந்த 11-ந் தேதி தனது நிலத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்தது. மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story