வாகனம் மோதி விவசாயி சாவு


வாகனம் மோதி விவசாயி சாவு
x

வாகனம் மோதி விவசாயி இறந்தார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே மழவராயன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56). விவசாயி. இவர் அரசடிபட்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மழவராயன்பட்டி இடுகாடு அருகே வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜேந்திரன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை ெபற்று வந்த ராேஜந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story