மின்னல் தாக்கி விவசாயி பலி


மின்னல் தாக்கி விவசாயி பலி
x

மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.

திருச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பெரிய வெள்ளபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 65). லாரி டிரைவரான இவர் விவசாயமும் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை அருகே உள்ள தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கவே அதே இடத்தில் வெங்கடாசலம் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story