கார் மோதி விவசாயி பலி


கார் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அருகே கார் மோதி விவசாயி பலியானார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா கருமொழி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 55). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் திருச்சி-ராமேசுவரம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் பாலசுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருவாடானை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story