விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x

களக்காடு அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமையா (வயது 65). விவசாயி. இவருக்கு கோமதி என்ற மனைவியும், 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் ராமையாவிற்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இதையொட்டி அவர் தினசரி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் சம்வத்தன்று விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராமையா இறந்தார். இதுபற்றி அவரது மகன் கண்ணன் (40) களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொ) ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story