வெவ்வேறு விபத்துகளில் விவசாயி-வாலிபர் பலி


வெவ்வேறு விபத்துகளில் விவசாயி-வாலிபர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் விவசாயி-வாலிபர் உயிரிழந்தனர்.

திருச்சி

கல்லக்குடி:

விவசாயி

புள்ளம்பாடி ஒன்றியம் வந்தலைகூடலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 53). விவசாயியான இவர் தனது மனைவி பூமணியுடன்(48) மொபட்டில், அரியலூர் மாவட்டம், வெங்கனூருக்கு பசுமாடு வாங்க சென்றார். பின்னர் அவர்கள் மொபட்டில் திரும்பி வந்தனர். புள்ளம்பாடி பாலத்தின் நடுவில் சென்றபோது, அந்த வழியாக வேகமாக சென்ற கார், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த பூமணி லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, காரை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் சிவபிரபு(24) மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

வாலிபர் பலி

சமயபுரம் அருகே மேளவாளாடியை அடுத்துள்ள குமுழூர் வடக்கு தெருவை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் செல்வராஜ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சிக்கு சென்றுவிட்டு, பின்னர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். மேலவாளாடி பாலம் அருகே வந்தபோது லால்குடியில் இருந்து திருச்சிக்கு சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story