பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்


பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
x

பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உரம்-பூச்சி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்தி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16,261 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. பருத்தி சாகுபடிக்கு சாதகமான சீதோசன நிலை நிலவியதால் விளைச்சல் அதிகரித்தது. அதற்கு ஏற்ற வகையில் பருத்தி பஞ்சின் கொள்முதல் விலையும் அதிகரித்தது. இதனால் இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஆர்வம் காட்டியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 16,500 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பருத்தி சாகுபடியினை சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தடையின்றி சொட்டு நீர் பாசனம் நடைபெறும் வகையில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் பருத்தி சாகுபடி பயிர்கள் 20 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது. இப்பயிர் நன்கு வளர உரம் தேவைப்படுகிறது.

மானிய விலையில் உரம்-பூச்சி மருந்து

பருத்தி செடிகளில் மாவு பூச்சி, அந்து பூச்சிகள் உள்ளிட்ட பூச்சிகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் பூச்சிகளிடமிருந்து பருத்தி பயிர்களை காப்பாற்றும் வகையில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அல்லது வேளாண் அலுவலகங்கள் மூலம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். பருத்தி பஞ்சுகளை கொள்முதல் செய்ய இந்திய பருத்தி கழகத்திலிருந்து முகவர்களை, மாவட்டங்களுக்கு நேரடியாக வரவழைத்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story