11-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


11-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 2:30 AM IST (Updated: 12 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி 11-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரியும், தேயிலைக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்வது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாக்குபெட்டா படுகர் நலச்சங்கம் சார்பில் கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கேர்பன், கீழ் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் தேயிலை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என பதாகைகளை ஏந்தி இருந்தனர். இதே போல் ஊட்டி அருகே பாலகொலா, கிண்ணக்கொரை கிராமங்களிலும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story