விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்


விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை பகுதி விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரேணுகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை கோட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் கடந்த 2017 ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தட்கல் முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்போது பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள, விருப்பம் உள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்புத் திட்டத்தின்கீழ் மின் இணைப்பு பெற மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளுமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story