விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
x

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.


Next Story